ஒழுக்கம்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
ஆம் எல்லாவற்றிலும் முழுமை என்பதே நிறைவு தருவதாக உள்ளது.
எல்லா செயல்களூக்குமான முழுமைக்குறிய அடிப்படைகளை நம் முன்னோர்கள் வகுத்ததே ஒழுக்கம். அதுவே அறம்
நமக்கு நிகழும் இன்ப ,துன்பம் அனைத்திற்கும் காரணமாக நிற்பதுவும் அதுவே.
பெற்றோரின் ஒழுக்கம் பிள்ளைக்கு
ஆசிரியனின் ஒழுக்கம் மாணவனுக்கு
ஒரு தலைவனின் ஒழுக்கம் தொண்டனுக்கு ..
என எல்லா ஒழுக்கமும் ஓர் விதியிலேயே அமைகிறது .அந்த விதியும் தனி மனித மாற்றத்திலிருந்தே துவங்குகிறது.
எந்த ஒரு தனிமனிதனின் ஒழுக்கமும் ..அவன் சூழலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பரவும்.அதுவே நற் குணத்தின் தன்மை.
உடல்,மனதின் ஒழுக்கமே உயிருக்கு அடிப்படை
உடலின் ஒழுக்கம் :
பசி ,தூக்கம் ,ஓய்வு,தாகம்
உணவே உடலின் ஒழுக்கத்திற்கு வித்திடுகிறது.
உணவின் விதி 1:
நல் உணவென்பது இடத்திலும்,காலத்திலும் விளையும் உணவே.(பருவகால பிரதேச உணவுகள்)
உணவின் விதி 2:
அந்த உணவு உடலுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக (ஒவ்வாமை இல்லா)இருக்கவேண்டும். அனுபவமே இதற்கு பாடம். உடலின் ஒழுக்கம் பேணப்படும்போது நல் உணவுகள் உங்களால் அறியப்படும்.
உணவின் விதி 3:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
அளவு மிகினும் ,குறையினும்
சுவை மிகினும் ,குறையினும்
நேரம் (வேளை) மிகினும்,குறையினும்
வளி முதலா எண்ணிய மூன்று என்பது உடலின் வாதம் ,பித்தம், சிலேத்தும் ஆகியவற்றை குறிக்கும் .. மேலே சொன்னது உணவின் தன்மை மட்டுமே..
வளி முதலா எண்ணிய மூன்று என்பது உடலின் வாதம் ,பித்தம், சிலேத்தும் ஆகியவற்றை குறிக்கும் .. மேலே சொன்னது உணவின் தன்மை மட்டுமே..
உணவின் தன்மை மனதில் எழும் எண்ணத்தின் தன்மைக்கு காரணம்.. ஆகவே நல் உணவு -> நல் உடல்- >நல் மனம்.
செயலின் ஒழுக்கம் :
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
ஒரு செயலின் அறம் எதுவென்று தெரிந்து செயல்படுவருக்கு அனைத்தும் சிறப்பாகவே நிகழும்.
நாம் அன்றாடம் செய்யும் வேலை அந்த நாளின் இறுதியில் ஒரு மன நிறைவைத் தரவேண்டும் .
செயலின் ஒழுக்கம் நிதானத்தில் உள்ளது . செயலில் மனதின் நிலையே பிரதானம். எந்த வேலையையும் படபடப்புடன் பொறுமை இன்றி செய்யாதீர்.
நிதானம் இன்றி செய்யும் எந்த ஒரு வேலையும் நேர வீணடிப்பே.
சமூக ஒழுக்கம் :
தனிமனித ஒழுக்கமே சமூக ஒழுக்கம் .ஆனால் தனிமனித செயலின் விளைவு சமூகத்தை பாதிக்காதவாறு இருத்தல் வேண்டும்.
ஒழுக்கம் - ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது-வாழ்வது ஒழுக்கமுடைமை. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறப்பால் அனைவரும் ஒருவரே ..எண்ணம் ,சொல் ..செயல் மூன்றிலும் ஒழுக்கமெனும் அறம் இருக்கும்போது
ஒழுக்கம் ஒரு தொடர் செயல்
—தொடரும்
Comments
Post a Comment