ஒழுக்கம் ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும். ஆம் எல்லாவற்றிலும் முழுமை என்பதே நிறைவு தருவதாக உள்ளது. எல்லா செயல்களூக்குமான முழுமைக்குறிய அடிப்படைகளை நம் முன்னோர்கள் வகுத்ததே ஒழுக்கம். அதுவே அறம் நமக்கு நிகழும் இன்ப ,துன்பம் அனைத்திற்கும் காரணமாக நிற்பதுவும் அதுவே. பெற்றோரின் ஒழுக்கம் பிள்ளைக்கு ஆசிரியனின் ஒழுக்கம் மாணவனுக்கு ஒரு தலைவனின் ஒழுக்கம் தொண்டனுக்கு .. என எல்லா ஒழுக்கமும் ஓர் விதியிலேயே அமைகிறது .அந்த விதியும் தனி மனித மாற்றத்திலிருந்தே துவங்குகிறது. எந்த ஒரு தனிமனிதனின் ஒழுக்கமும் ..அவன் சூழலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பரவும்.அதுவே நற் குணத்தின் தன்மை. உடல்,மனதின் ஒழுக்கமே உயிருக்கு அடிப்படை உடலின் ஒழுக்கம் : பசி ,தூக்கம் ,ஓய்வு,தாகம் உணவே உடலின் ஒழுக்கத்திற்கு வித்திடுகிறது. உணவின் விதி 1: நல் உணவென
தமிழ் நன் நெறி கூறும் அற வாழ்வியலை நோக்கிய பயணம்